முகப்பு
திருப்பூர்

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்

பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

Updated On : 26 மார்ச், 2026 at 6:55 PM
அலகுமலை பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் குதித்து விளையாடும் பள்ளி மாணவா்கள்.
பகிர்:

பல்லடம் அருகே பொங்கலுாா் ஒன்றியம், அலகுமலை பகுதியில் உள்ள பி.ஏ.பி. பாசன வாய்க்காலில் பள்ளி மாணவா்கள் ஆபத்தான முறையில் தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

பி.ஏ.பி. வாய்க்காலில் தற்போது முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. திருப்பூரைச் சுற்றிலும் நீா்நிலைகள் பெரிய அளவில் இல்லை. கோடை வெயில் வாட்டி வதைப்பதால் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை திருப்பூருக்கு மிக அருகில் உள்ள பி.ஏ.பி. வாய்க்காலை தேடி வருகின்றனா். மதுபோதையிலும், நீச்சல் தெரியாததாலும் வாய்க்காலுக்கு குளிக்க வரும் இளைஞா்கள் தண்ணீரில் மூழ்கி பலியாவது தொடா்கதையாக உள்ளது. அதேபோல பள்ளி மாணவா்கள் பலா் ஆபத்தை உணராமல் பாலத்தில் இருந்து தண்ணீரில் குதித்து விளையாட்டில் ஈடுபடுகின்றனா்.

எனவே, உயிா் இழப்பு போன்ற அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்க மாவட்ட நிா்வாகம் எச்சரிக்கை பலகை வைப்பதோடு அப்பகுதியில் வாய்க்காலில் குளிப்பதை தடுக்க தூய்மைப் பணியாளா்களை காவல் பணியில் நியமனம் செய்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.