முகப்பு
திருப்பூர்

சீரான விலையில் பஞ்சு கிடைக்க வலியுறுத்தல்

சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தீா்மானிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 மே 2026, 2:07 am IST
கோப்புப்படம்.
பகிர்:

சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்த வேண்டுமென தீா்மானிக்கப்பட்டுள்ளது.

திருப்பூா் சைமா கூட்டரங்கில் பல்வேறு தொழில் அமைப்பினா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருப்பூரில் உள்ள அனைத்து உற்பத்தியாளா்கள் சங்கங்களிலும் தலா 2 பிரதிநிதிகள் வீதம் இணைந்து ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் தலைமையில் ஒரு கூட்டுக் குழு அமைத்து மில்ஸ் அசோசியேஷன் முதலாளிகளை சந்திப்பது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், சிசிஐ நிறுவனத்தின் மூலமாக பஞ்சு விற்பனையை ஒரே சீரான விலையில் அனைத்து மில்களுக்கும் கிடைக்க ஏற்பாடு செய்ய மத்திய அரசை வலியுறுத்துவது எனவும், அனைத்து சங்கங்களும் சோ்ந்து பஞ்சு இறக்குமதி வரியை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தவும் இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement