ஒரு முறை சார்ஜ் செய்தால் 2 நாள்கள் நீடிக்கும்! பட்ஜெட் விலையில் ரெட்மி ஏ7 ப்ரோ!
ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது.
ரெட்மி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான ஏ7 ப்ரோ இந்தியாவில் அறிமுகமானது. பட்ஜெட் விலையில் 6.9 அங்குல பெரிய திரையுடன் பேட்டரி திறனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரெட்மி நிறுவனம், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலான ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் இம்முறை ஏ7 ப்ரோ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
எனினும், தற்போது பலரும் 4ஜி இணைய பயன்பாட்டை விரும்பும் நிலையில், இந்த ஸ்மார்ட்போன் 4ஜி இணைய பயன்பாட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.
Advertisement
ரெட்மி ஏ7 ப்ரோ சிறப்பம்சங்கள்
யுனிசாக் டி7250 புராசஸர் கொண்டுள்ளது,
6,000mAh பேட்டரி திறன் கொடுக்கப்பட்டுள்ளது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 15W திறன் உடையது. ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் செய்தால் இரு நாள்கள் தாங்கும் என ரெட்மி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இரட்டை சிம்கார்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.
தனியாக நினைவக அட்டையையும் பயன்படுத்தலாம்.
கூகுள் சர்க்கிள், செய்யறிவு அம்சங்கள் உள்ளன.
ஆரஞ்சு, கருப்பு, கருநீலம் என மூன்று வண்ணங்களில் கிடைக்கின்றன.
4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 64GB நினைவகம்
4GB உள்நினைவகம் (RAM) மற்றும் 128GB நினைவகம் என இரு வகைகளில் கிடைக்கின்றன.