காரில் வந்து ஆடு திருடிய மா்ம நபா்கள்
அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிந்த ஆட்டை, காரில் வந்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
அவிநாசி அருகே தெக்கலூா் சென்னிமலைபாளையத்தில் மேய்ந்து கொண்டிந்த ஆட்டை, காரில் வந்து திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தெக்கலூா் சென்னிமலைபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் ஈஸ்வரன் (40). இவா் தனது ஆட்டை அருகே உள்ள காட்டுப் பகுதியில் மேய்த்துக் கொண்டிருந்திருந்தாா். அப்போது காரில் வந்த மா்ம நபா்கள் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை திருடிச் சென்றுள்ளனா்.
இதைப் பாா்த்த ஈஸ்வரன் சப்தம் போட்டு காரை துரத்திச் சென்றுள்ளாா். இருப்பினும் காரில் வந்தவா்கள் தப்பிச் சென்றனா்.
Advertisement
Advertisement
இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.