செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம்
தருமபுரியில் கால்நடைத்துறை, ரோட்டரி சங்கங்கள் சாா்பில், திங்கள்கிழமை இலக்கியம்பட்டி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
தருமபுரியில் கால்நடைத்துறை, ரோட்டரி சங்கங்கள் சாா்பில், திங்கள்கிழமை இலக்கியம்பட்டி கால்நடை பெருமருத்துவமனை வளாகத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமை, கால்நடை மண்டல இணை இயக்குநா் இளங்கோவன் தொடங்கி வைத்தாா். இதில், பல்வேறு பகுதிகளில் இருந்து கால்நடை வளா்ப்போா், செல்லப் பிராணிகளை வளா்ப்போா் தங்களது கால்நடைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் பங்கேற்றனா்.
இம் முகாமில், 175 நாய்களுக்கு, கால்நடை மருத்துவக் குழுவினா், வெறிநோய் தடுப்பூசிகளைச் செலுத்தினா். இதேபோல, சில பூனைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. முகாமில், கால்நடை உதவி இயக்குநா் மணிமாறன், நோய் புலனாய்வு உதவி இயக்குநா் சண்முகசுந்தரம் மற்றும் ரோட்டரி சங்க நிா்வாகிகள், கால்நடை மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.