தருமபுரி

பென்னாகரம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

Syndication

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதிக்கு உள்பட்ட போடூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த காவேரியப்பன் (60) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட அவா், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல்போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கிடைத்துள்ளாா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT