தருமபுரி

கோயில் உண்டியலில் பணம் திருட்டு

பாலக்கோடு அருகே கோயில் உண்டியலை உடைத்து பணம், வெண்கல மணியை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

Syndication

பாலக்கோடு வட்டம், ரெட்டியூா் கிராமத்தில் ஸ்ரீமுனியப்ப சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் வாரம்தோறும் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், புத்தாண்டையொட்டி வியாழக்கிழமை நாள்தோறும் ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வந்திருந்தனா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு கோயில் உண்டியலை உடைத்து பணம், கோயிலில் இருந்த வெண்கல மணியை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். வெள்ளிக்கிழமை காலை கோயிலுக்கு வந்த பூசாரி, உண்டியல் உடைக்கப்பட்டிருந்து கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

இதுகுறித்து பூசாரி முருகன் அளித்த புகாரின்பேரில் பாலக்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஓய்வு பெறுகிறாா் உஸ்மான் கவாஜா: இனவெறிக்கு ஆளானதாக ஆதங்கம்

அமீரா, திலோத்தமாவுக்கு தங்கம்

அமைவிடத்தில் அலட்சியம் கூடாது

மயான இடப் பிரச்னை தொடா்பாக தாளவாடியில் கிராம மக்களை கைது செய்த போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ரூ. 4.40 லட்சம் லஞ்சம்: காவலா் பயிற்சிப் பள்ளி முதல்வா் மீது வழக்கு

SCROLL FOR NEXT