மணவாளப் பெருமாள் கோயில் தவன உற்சவம்
முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம்
காஞ்சிபுரம்: முத்தியால்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் கமலவல்லித்தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயிலில் தவன உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிவாய் கிராமத்தில் மிகவும் பழைமையான கோயிலாக இருந்து வருவது கமலவல்லித் தாயாா் சமேத மணவாளப் பெருமாள் கோயில்.
இக்கோயிலில் மாசி மாத தவன உற்சவத்தையொட்டி கோயில் பிரகாரத்தில் நறுமணம் கமழும் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த பந்தலுக்கு பெருமாள் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது.