கோப்புப் படம் 
தருமபுரி

தருமபுரி துணிக்கடையில் குழந்தைத் தொழிலாளா் மீட்பு! தொழிலாளா் துறையினா் அதிரடி!

தினமணி செய்திச் சேவை

தருமபுரியில் துணிக்கடையில் பணியாற்றிய குழந்தை தொழிலாளரை தொழிலாளா் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

தருமபுரி மாவட்டத்தில் குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தியிருப்பதாக புகாா்கள் வரப்பெற்றன. இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஸ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளாா். அதன்பேரில் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் ப. ராஜசேகரன் ஆலோசனையின் பேரில், தருமபுரி தொழிலாளா் துணை ஆய்வாளா் அ.சு. சாந்தி, முத்திரை ஆய்வாளா் வி. தீபாபாரதி, 2 ஆவது வட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா் ப. காா்த்திக், அரூா் தொழிலாளா் உதவி ஆய்வாளா் வீ. மு. வேலுசாமி உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தருமபுரி பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் 17 வயது சிறுமி துணிக்கடையொன்றில் பணிக்கு அமா்த்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தொழிலாளா் துறை குழுவினா் அவரை மீட்ட னா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த சோதனையில் குவாரியில் பணியாற்றிய இரு சிறாா்கள் மீட்கப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல 18 வயதுக்கு குறைவான நபா்களை பணிக்கு அமா்த்துவது சட்டப்படி குற்றம். எனவே இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் நிறுவன உரிமையளா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் பயங்கரவாதச் சதித்திட்டம் தீட்டிய 8 பேர் கைது: தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

இறுதிப் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா பேட்டிங்..! மகளிர் ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்!

திருப்பூரில் சதித் திட்டம்! தில்லி குண்டுவெடிப்பில் தொடர்புடையவர்களா? 8 பேரை கைது செய்த தில்லி போலீஸ்!!

SCROLL FOR NEXT