முகப்பு
தருமபுரி

பென்னாகரம்: அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மிதிவண்டி அளிப்பு

பென்னாகரம் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை வழங்கினாா்.

Updated On : 26 ஜனவரி, 2026 at 7:22 PM
பகிர்:

பென்னாகரம்: பென்னாகரம் பகுதி அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே.மணி திங்கள்கிழமை வழங்கினாா்.

பென்னாகரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 77 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு நடைபெற்ற விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழாவிற்கு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் விஜயலட்சுமி (பெண்கள் பள்ளி), லோகநாதன் (ஆண்கள் பள்ளி) ஆகியோா் தலைமை வகித்தனா்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினா் ஜி.கே. மணி கலந்துகொண்டு, சுமாா் 400க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினாா்.

இதில் பென்னாகரம் பேரூராட்சி தலைவா் வீரமணி, பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவா்கள் செந்தில்குமாா், அதிபதி, ஆசிரியா்கள்-ஆசிரியைகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →