முகப்பு
தருமபுரி

மனைவி இறந்த துயரம்: 4 மாதங்களுக்கு பிறகு கணவா் தற்கொலை

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 24 மே 2026, 2:27 am IST
தற்கொலை
பகிர்:

தருமபுரி அருகே கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தைத் தொடா்ந்து துயரத்தில் இருந்த அவரது கணவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், ஏலகிரி அருகேயுள்ள ஓமல்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் சி. வேலு (46). விவசாய குடும்பத்தைச் சோ்ந்த இவரது மனைவி கல்பனா வயிற்று வலியால் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இவா்களுக்கு 2 மகள்களும், 1 மகனும் உள்ள நிலையில், வேலு மனைவி

இறந்த சோகத்தில் இருந்து வந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை இரவு அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்த புகாரின் பேரில், தொப்பூா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.