அனுமதி பெறாத விளம்பர பேனர்கள் அகற்றப்படும்
சேலம், ஜன. 8: சேலம் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத விளம்பர பேனர்களை வரும் 11-ம் தேதிக்குள் அகற்றிக் கொள்வதாக ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அன
சேலம், ஜன. 8: சேலம் நகர் உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள அனுமதி பெறாத விளம்பர பேனர்களை வரும் 11-ம் தேதிக்குள் அகற்றிக் கொள்வதாக ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்துக் கட்சியினரும் சம்மதம் தெரிவித்தனர்.
சேலம் மாவட்டத்தில் விளம்பரப் பலகைகள் வைப்பது தொடர்பாக, ஆட்சியர் சந்திரகுமார் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாநகர மேயர் ரேகா பிரியதர்ஷிணி, போலீஸ் கமிஷனர் சுனில்குமார் சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேமுதிகவுக்கு ஆதரவாக அதிமுக: கூட்டத்தில் அதிமுக மாநகர் மாவட்டச் செயலர் எம்.கே. செல்வராஜ் பேசும்போது, இப்போது ஒரு கட்சியினர் மாநாடு நடத்தும்போது அவர்கள் மீது வழக்குத் தொடருவதும், திடீரென கூட்டம் நடத்தி பேனர்களை அகற்றச் சொல்வதும் சரியல்ல. பாகுபாடு பார்க்காமல் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
அதிமுக முன்னாள் எம்பி எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, கிராமப்புறங்களில் போலீஸôரிடம் அனுமதி பெறுவதற்கே பல நாள்கள் ஆகின்றன. இப்பிரச்னைக்கு முதலில் தீர்வு காணுங்கள் என்றார்.