தருமபுரி

கம்பைநல்லூர் அருகே பெண் மர்மச் சாவு

தினமணி

கம்பைநல்லூர் அருகே பெண் ஒருவர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிந்துள்ளனர்.
 தருமபுரி மாவட்டம், கொன்றம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காளியப்பன் மனைவி மகேஸ்வரி (37). இவர் கழுத்துப் பகுதியில் சேலையால் இறுக்கப்பட்டு, மர்மான முறையில் இறந்து கிடந்தது புதன்கிழமை தெரியவந்தது.
 இதுகுறித்து போலீஸாரின் விசாரணையில், மகேஸ்வரிக்கும் அதே ஊரைச் சேர்ந்த தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் கோவிந்தசாமி என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், மகேஸ்வரி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவத்தில், கோவிந்தசாமிக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மகேஸ்வரி இறந்த சம்பவம் தொடர்பாக கோவிந்தசாமியை கம்பைநல்லூர் போலீஸார் விசாரணைக்கு அழைத்ததாக கூறப்படுகிறது.
 இந்த நிலையில், இருமத்தூர் அருகே கோவிந்தசாமி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டிருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. போலீஸாரின் விசாரணைக்கு பயந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிடிஇஏ பூசா சாலைப் பள்ளியில் ஏடிஎல் சமூக தின விழா

குடியிருப்புக் கட்டடத்தில் தீ விபத்து: தீயணைப்பு வீரா் உள்பட 3 போ் காயம்

வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

ரூ. 1 லட்சம் போதைப் பொருள்கள் கடத்தல்: தம்பதி கைது

கிணற்றில் மூதாட்டி சடலம் மீட்பு

SCROLL FOR NEXT