முகப்பு
தருமபுரி

முயல் வேட்டை: ரூ. 20 ஆயிரம் அபராதம்

தீர்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

தீர்த்தமலை அருகே முயல் வேட்டையாடிய இருவருக்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் புதன்கிழமை விதிக்கப்பட்டது.
தீர்த்தமலை வனச் சரகர் எஸ். தண்டபாணி தலைமையிலான வனத் துறையினர் தாம்பல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் 2 பேர் முயல்களை வேட்டையாடி சமையல் செய்வது தெரியவந்தது.
விசாரணையில் அந்த இருவரும் நீப்பத்துறை கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் மகன் கண்ணன் (47), அதே ஊரைச் சேர்ந்த முருகேசன் (70) என்பது தெரியவந்தது. இதையடுத்து, வன விலங்குகளை வேட்டையாடிய குற்றத்துக்காக இருவருக்கும் தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதித்து மாவட்ட வன அலுவலர் (அரூர்) எஸ். செண்பகப்பிரியா உத்தரவிட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →