முகப்பு
தருமபுரி

மாணவியருக்கு மனரீதியில் தொல்லையா? பள்ளியில் புகார் பெட்டி வைத்தது போலீஸ்

தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில், புதன்கிழமை புகார்பெட்டி வைக்கப்பட்டது.

தருமபுரி

மாணவியருக்கு மனரீதியில் தொல்லையா? பள்ளியில் புகார் பெட்டி வைத்தது போலீஸ்

தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில், புதன்கிழமை புகார்பெட்டி வைக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில், புதன்கிழமை புகார்பெட்டி வைக்கப்பட்டது.
தருமபுரி ஒளவையார் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவியர் பயின்று வருகின்றனர்.
இப்பள்ளியில், நகர காவல் நிலையம் சார்பில், மாணவியர் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரிவிக்கும் வகையில், புகார் பெட்டிகள் வைக்கப்பட்டன. இதில், மாணவியர் தங்களுக்கு உடல் மற்றும் மன ரீதியான பிரச்னைகள், கேலி, கிண்டல், பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை மனுவாக எழுதி போடலாம். மேலும், புகார் எழுதுவர்கள் தங்களது பெயர்களை எழுத வேண்டியதில்லை. பிரச்னைகளை  ஏற்படுத்துவோரின் பெயரைக் குறிப்பிடலாம். இப்புகார்கள் மீது விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →