தருமபுரி

பெரியார் விருதைப் பெற விண்ணப்பிக்கலாம்

DIN

தமிழக அரசால் வழங்கப்படும் சமூக நீதிக்கான தந்தைப் பெரியார் விருதை பெற தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: ஒவ்வோர் ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுவர்களைச் சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தைப் பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதில் ரூ.ஒரு லட்சம் பொற்கிழியும், ஒரு சவரன் தங்கப் பதக்கமும் வழங்கப்படுகிறது.
2017-ஆம் ஆண்டுக்கான தந்தைப் பெரியார் விருதாளர் மாநில அரசால் தேர்வு செய்யப்படவுள்ளார்.
எனவே, சமூக நீதிக்காக பாடுபட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயர மேற்கொண்ட பணிகள் மற்றும் சாதனைகள் ஆகியவற்றுடன் முழு சுய விவரங்களைக் குறிப்பிட்டு, தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு: பிரசாரம் ஓய்வு

ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு 4 சதவீத இடஒதுக்கீடு: சந்திரபாபு நாயுடு உறுதி!

கனவு இதுவோ..!

SCROLL FOR NEXT