முகப்பு
தருமபுரி

ஏப்.26-இல் சாம்பியன்ஷிப் மதிப்பீட்டு சதுரங்கப் போட்டி

தருமபுரியில் வருகிற ஏப்.26-ஆம் தேதி சதுரங்க விளையாட்டு சாம்பியன்ஷிப் மதிப்பீட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:48 am IST
பகிர்:

தருமபுரியில் வருகிற ஏப்.26-ஆம் தேதி சதுரங்க விளையாட்டு சாம்பியன்ஷிப் மதிப்பீட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரியில் உள்ள கமலம் இண்டர்நேஷனல் பள்ளியில் வருகிற 26-ஆம் தேதி தொடங்கி, ஏப்.30-ஆம் தேதி வரை தேசிய அளவில் தரப்புள்ளிகள் பெறுகிற சாம்பியன்ஷிப் மதிப்பீட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் அனைத்து வயதினரும் பங்கேற்கலாம். இதில், சிறப்பிடம் பெறுகிற  9, 13 மற்றும் 19 வயதுக்குள்பட்டோருக்கு பரிசுகள் வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்போர் நுழைவுக்கட்டணம் செலுத்த வேண்டும். தொடர்புக்கு 8973773773.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.