விளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள்
தருமபுரி மாவட்டம், கோடுபட்டி வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் செல்லும்
தருமபுரிவிளை நிலங்களுக்குள் புகுந்த யானைகள்
தருமபுரி மாவட்டம், கோடுபட்டி வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் செல்லும்
தருமபுரி மாவட்டம், கோடுபட்டி வனப் பகுதியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி, நாட்றாம்பாளையம் செல்லும் வழித்தடத்தில் சனிக்கிழமை இரவு விளை நிலங்களுக்குள் யானைகள் புகுந்தன.
கோடுபட்டி ஜெயராமன் என்பவரின் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு மற்றும் வெங்காயங்களை மிதித்து துவம்சம் செய்தன. தகவலறிந்து சென்ற வனத் துறையினர் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை தொடர்ந்து 5 மணி நேரம் போராடி அவற்றை மீண்டும் வனத்துக்குள் விரட்டினர். சுமார் 15 யானைகள் ஞாயிற்றுக்கிழமை பகலில் கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதிக்குள் சென்றன.