பாப்பிரெட்டிப்பட்டி அருகே கிரானைட் கல் கடத்தி வந்த லாரியை கனிம வளத் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் கனிம வளத் துறை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ஒரு லாரியை சோதனை செய்ததில், லாரியில் அரசு அனுமதியின்றி பெங்களூரில் இருந்து காளிப்பேட்டைக்கு கிரானைட் கல் எடுத்துச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து, கிரானைட் கல் மற்றும் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர் கதிரிபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாரியப்பனிடம் (41) அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.