தருமபுரி

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

DIN

தருமபுரி அருகே இருவேறு இடங்களில் நிகழ்ந்த விபத்துகளில்,  இருவர் உயிரிழந்தனர்.
தருமபுரியை அடுத்த பச்சினம்பட்டி காட்டுக்கொட்டாயைச் சேர்ந்த  வேணுகோபால் மகன் கட்டடத் தொழிலாளிமணிகண்டன்(30) .  இவர்  ஞாயிற்றுக்கிழமை சவுளூர் மேம்பாலம் அருகே  தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலை ஓரமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில்  பலத்த காயம் அடைந்த மணிகண்டன் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.  ஆனால்,  அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். 
மற்றொரு சம்பவம்:  பழைய தருமபுரியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம் (47).   இவர் ஞாயிற்றுக்கிழமை தனது ஆட்டோவில் தருமபுரிக்கு வந்தபோது,   எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த  பன்னீர்செல்வம்,  தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

SCROLL FOR NEXT