தருமபுரி

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

DIN

சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்கக் கோரி, வீரபோயர் இளைஞர் பேரவை சார்பில்,  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநில துணைத் தலைவர் ராஜேஷ் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் சின்னப்பன் முன்னிலை வகித்தார். மாநிலத் தலைவர் பு.ரா.சிவகாமி, மாநிலச் செயலர் மு.அருள் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இந்த  ஆர்ப்பாட்டத்தில், 1979- இல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை எண் 1310-ஐ திரும்பப்பெற வேண்டும். சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர்களை நியமிக்க வேண்டும். ஈஸ்வரய்யா ஆணைய பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் கண்காணிப்பு கேமரா பழுது: ஒரு மணி நேரத்தில் புதிய கேமரா பொருத்தம்

பா்கூா் மலைப் பாதையில் சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து

SCROLL FOR NEXT