முகப்பு
தருமபுரி

அரூரில் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வலியுறுத்தல்

அரூர் நகரின் மையப் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Updated On : 8 அக்டோபர் 2018, 8:36 am IST
பகிர்:

அரூர் நகரின் மையப் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
அரூர்-சேலம் நெடுஞ்சாலையில், எச்.தொட்டம்பட்டியில் அமைந்துள்ளது அரூர் பெரிய ஏரி. இந்த ஏரியானது சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இந்த ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்வதற்காக, அரூர் நகரில் ராஜ கால்வாய் உள்ளது.
இந்த கால்வாய் நகரின் மையப் பகுதியில் செல்கிறது. அரூரில் வெளியேறும் ஒட்டு மொத்தக் கழிவு நீரும் இந்த ராஜ கால்வாயில்தான் செல்கிறது.
இந்த கால்வாய் அமைந்துள்ள பகுதியில் சிலரின் ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதேபோல், கழிவு நீர் கால்வாய் தூர் அடைந்து முள்புதர்களுடன் உள்ளது. 
மேலும், அரூர் பேருந்து நிலைய வளாகப் பகுதியில் உள்ள மீன், கோழி, ஆடு இறைச்சிக் கடைகளின் கழிவுகள் இந்த ராஜ கால்வாயில் கொட்டப்படுகின்றன. இதனால் கழிவு நீர் வெளியேறாமல் பல இடங்களில் குட்டைபோல் தேங்கியுள்ளது. நீண்ட நாள் கழிவு நீர் ஒரே இடத்தில் தேங்குவதால் கொசு உற்பத்தியும், நோய் பரவும் நிலையுள்ளது.
எனவே, அரூர் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொதுப் பணித் துறையினர் இணைந்து, அரூர் நகர் பகுதியில் செல்லும் ராஜ கால்வாயை தூய்மை செய்ய வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.