பாலக்கோடு உலகத் தமிழ்க் கழகத்தின் சார்பாக ஓய்வுபெற்ற ஆசிரியர் அலுவலக கட்டடத்தில் கவிஞர்கள் கவிதைகள் வாசித்து கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இதில் கவிஞர்கள், கருணாநிதியின் தமிழாற்றல், இலக்கியம்,தியாகம் குறித்து கவிதைகளை வாசித்தனர். கவிஞர்கள் கதிர்பாரதி, அரங்கநாயகி, செயபிரகாசம், தகடூர் ராமமூர்த்தி, வ.செ.குணா, முருகேசன், பட்டிமன்ற பேச்சாளர் இளந்தென்றல் சரவணன், இரா.வெ.அரங்கநாதன், புலவர் ராமசாமி, கோ.வெங்கடாசலம் என பலரும் கவிதைகள் மூலம் அஞ்சலி செலுத்தினர்.
இதில் கல்லூரி மாணவர்கள், பெண்கள், திமுகவினர் கலந்து கொண்டனர்.இதற்கான ஏற்பாடுகளை உலகத் தமிழ்க் கழகத்தின் செயலாளர் எஸ்.குணசேகரன், கோ.வெங்கடாசலம்,ராமசாமி,முருகேசன்,பாலன் சீதாலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.