கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வரும் வியாழக்கிழமை (செப்.27) நடைபெறவுள்ள மக்கள் நீதிமன்ற முகாமில், இப்பகுதியைச் சேர்ந்த பிஎஸ்என்எல் தரைவழித் தொலைபேசி, வில் மற்றும் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் தங்களது நிலுவைத் தொகைகளை தள்ளுபடியுடன் செலுத்ததலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி தொலைத்தொடர்பு மாவட்டப் பொதுமேலாளர் அலுவலகம் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்கள் நீதிமன்றம் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.