பாலக்கோடு அருகே ரயில் தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த ஆண் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பஞ்சப்பள்ளியில் உள்ள பாளையத்தைச் சேர்ந்த வேங்கடசாமியின் மகன் சிவானந்தன் (22), பாலக்கோடு தருமபுரிச் செல்லும் வழியான ரயில் தண்டவாளத்தில் தலைத் துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாகக் கிடந்தார்.
தகவல் அறிந்ததும் ரயில்வே நிலைய போலீஸார் நிகழ்விடம் சென்று சடலத்தை மீட்டு தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.