ஊத்தங்கரையில் அரசு அனுமதியின்றி மது விற்றதாக இரு பெண்களை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 லட்சம் மதிப்புள்ள 742 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர்.
ஊத்தங்கரை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தாமரை, நேரு நகரைச் சேர்ந்த சின்னத்தாய் ஆகியோர் அரசு அனுமதியின்றி மதுபான புட்டிகளை வாங்கி வைத்து அரசு விடுமுறை நாள்களில் விற்று வந்துள்ளனர். இது குறித்து ஊத்தங்கரை போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் ஆய்வாளர் பெ.நடராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மதுப் புட்டிகளை பறிமுதல் செய்து, மது விற்ற இரு பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.