தருமபுரி

"மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க தயார் நிலையில் சக்கர நாற்காலிகள்'

DIN

தேர்தல் வாக்குப் பதிவு நாளான்று  மாற்றுத் திறனாளிகள்  வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி மையங்களில் சக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து  தருமபுரி மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சு.மலர்விழி திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:  மக்களவைத்  தேர்தலில் தருமபுரி மாவட்டத்தில், 9,593 மாற்றுத் திறனாளிகள் 812 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க உள்ளதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிரமமின்றி வாக்களிக்க  ஏதுவாக  அனைத்து வாக்குச் சாவடிகளிலும் சாய்வுத் தளப் பாதை மற்றும் 812 சக்கர நாற்காலிகள், உதவிக்காக தன்னார்வலர்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர். மேலும்  ஒவ்வொரு தொகுதிக்கும்  2 வாகனம் மாற்றுத் திறனாளிகளின்  போக்குவரத்து வசதிக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  1950 என்ற எண்ணில் தொடர்புகொண்டு, தங்கள் வாக்களிக்கும் வாக்குச் சாவடி மற்றும்  புகார்கள், சக்கர நாற்காலிகள், வாகனம் தேவைப்படுவோர் தெரியப்படுத்தலாம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸும், கம்யூனிஸ்டும் பாஜகவுக்கு உதவுகின்றன: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

சீனாவுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ராஜ்நாத் சிங்

திண்டுக்கல் இந்திய கம்யூ. நிா்வாகி மறைவு: இரா.முத்தரசன் இரங்கல்

பாண்டியாறு, மோயாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தக் கோரிக்கை

பாக். படகில் கடத்திய ரூ.600 கோடி போதைப் பொருள் பறிமுதல்: 14 போ் கைது

SCROLL FOR NEXT