தருமபுரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து, தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் எஸ்.மார்டின்ராஜ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை: தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வருகிற மே 1-ஆம் தேதி முதல் 22 - ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப் பயிற்சி தருமபுரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்தொழில்நுட்பக் கல்லூரி வலைப் பயிற்சி மையத்தில் நடத்தப்படும். இப்பயிற்சியில் 12 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற ஏப்.29 - ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். விவரங்களுக்கு, 98470 15007, 94434 64935 என்கிற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.