தருமபுரி

கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம்: மே 1-இல் தொடக்கம்

DIN


தருமபுரியில் பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வருகிற மே 1-ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதுகுறித்து,  தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் எஸ்.மார்டின்ராஜ்  செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:  தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் வருகிற மே 1-ஆம் தேதி முதல் 22 - ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கான கோடை கால கிரிக்கெட்  பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இப் பயிற்சி தருமபுரி ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்தொழில்நுட்பக் கல்லூரி வலைப் பயிற்சி மையத்தில் நடத்தப்படும். இப்பயிற்சியில் 12 வயது முதல் 17 வயது வரையிலான மாணவர்கள் பங்கேற்கலாம். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வருகிற ஏப்.29 - ஆம் தேதிக்குள் தங்களது பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். விவரங்களுக்கு, 98470 15007, 94434 64935 என்கிற செல்லிடப் பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT