தருமபுரி

நலத் திட்ட உதவிகளை உடனே வழங்க வலியுறுத்தல்

DIN

நலத் திட்ட உதவிகளை விரைந்து வழங்க வேண்டும் என கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.
ஏஐடியூசியின் தருமபுரி மாவட்ட கட்டடத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை தருமபுரியில் நடைபெற்றது. சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் குழந்தைவேலு தலைமை வகித்தார். ஏஐடியூசி-இன் மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன், செயலாளர் கே.மணி, செயலாளர் ஆர்.சுதர்சனன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கட்டடத் தொழிலாளர் குழந்தையின் கல்வி உரிமையைப் பாதிக்காத வகையில் தில்லி அரசு வழங்குவதை போல, தமிழக அரசும் நிதியுதவி வழங்க வேண்டும். கட்டத் தொழிலாளிக்கான நலத் திட்ட உதவிகளை உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

SCROLL FOR NEXT