தருமபுரி

அரசுப் பணியாளர்களுக்கு நாளை மாநில வாலிபால் தேர்வு போட்டி

DIN

தமிழக அரசுப் பணியாளர்களுக்கான மாநில அளவிலான வாலிபால் தேர்வுப் போட்டி வருகிற பிப்.21-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
இது குறித்து, தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜி.எஸ்.ராஜேந்திரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 2018 - 19 -ஆம் ஆண்டுக்கான அரசுப் பணியாளர்களுக்கு மாநில அளவிலான வாலிபால் (ஆண்கள் மட்டும்) தேர்வு போட்டிகள் பிப்.21-ஆம் தேதி காலை 9 மணிக்கு சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இத்தேர்வு போட்டிகளில் தமிழக அரசுப் பணியாளர்கள் கலந்து கொள்ளலாம். போட்டிகளில் கலந்து கொள்ளும் வீரர்களுக்கு தினப்படி மற்றும் பயணப்படி வழங்கப்பட மாட்டாது. மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவர். எனவே, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆர்வமுள்ள அரசுப் பணியாளர்கள் இப் போட்டிகளில் பங்கேற்று பயனடையலாம். விவரங்களுக்கு 7401703469, 7401703470 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT