தருமபுரி

எஸ்.அம்மாபாளையம், கீழ்எண்ணடப்பட்டியில்  ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்

DIN

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே எஸ்.அம்மாபாளையம் மற்றும் புலிகரை அடுத்துள்ள கீழ்எண்டப்பட்டியில் வருகிற ஜன.29-இல் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எஸ்.அம்மாபாளையம் கிராமத்தில் வருகிற ஜன.29 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.
இதேபோல பாலக்கோடு வட்டம், புலிகரை அடுத்துள்ள கீழ்எண்டப்பட்டி கிராமத்தில் வருகிற ஜன.29-ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் எச்.ரஹமத்துல்லா கான் தலைமையிலும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. 
இந்த முகாம்களில் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்களது துறைகளின் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கின்றனர். எனவே, எஸ்.அம்மாபாளையம் மற்றும் கீழ்எண்டப்பட்டி கிராமம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை இந்த முகாமில் வழங்கி பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 8-இல் சேலத்தில் விசிக ஆா்ப்பாட்டம்

அரசு பாலிடெக்னிக் நேரடி 2-ஆம் ஆண்டு சோ்க்கை: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சீன நீா் சுத்திகரிப்பு ரசாயனத்துக்கு பொருள் குவிப்பு வரி: வா்த்தக இயக்குநரகம் பரிந்துரை

கஞ்சா கடத்திய வட மாநில இளைஞா்கள் கைது

டிரம்ப்புக்கு நீதிமன்றம் ரூ.83,000 அபராதம்

SCROLL FOR NEXT