தருமபுரி

கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

DIN

தருமபுரி மாவட்டத்தில், அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை காட்டிலும் கூடுதலாக வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.க.வினர் மனு அளித்தனர்.
தருமபுரி நகர பா.ஜ.க. சார்பில் நகரத் தலைவர் கே.சரவணன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு:  தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை விட கூடுதலாக வசூலிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 
தருமபுரி நேதாஜி புறவழிச்சாலையில் பிடமனேரி பிரிவு சாலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். தருமபுரி நான்கு முனைச் சாலைப் பகுதியில் திரையரங்கம் அருகில் உள்ள மதுக்கடை மற்றும் பேருந்து நிலைய நுழைவு வாயில் அருகே உள்ள மதுக்கடை ஆகிய இரண்டு மதுக்கடைகளால், மாணவ, மாணவியர், பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, இவ்விரு மதுக்கடைகளையும் அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லைஸ்தானத்தில் பெருமாள் கோயில் தேரோட்டம்

50 சதவீத மானியத்தில் வேளாண் இடுபொருள்கள்

பேராவூரணி நீதிமன்றத்துக்கு கட்டடம் கட்ட இடம்:  உயா்நீதிமன்ற நீதிபதி ஆய்வு

வாக்குப் பதிவு சதவீதத்தை அதிகரித்து பாஜக நாடகம்: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு

காவிரி ஒழுங்காற்று குழுத் தலைவரை மாற்ற விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT