தருமபுரி

காவல் ஆய்வாளருக்கு பிடிவாரண்ட்

DIN

அரூரில் நீதிமன்றத்தில் ஆஜராகாத காவல் ஆய்வாளருக்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டம், நிலக்கோட்டை காவல் நிலையத்தில், காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ஜி.கே.சலீம். இவர், அரூரில் மதுவிலக்கு அமல் பிரிவில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்த போது, 8.7.2010-இல் அரூர்-சேலம் நெடுஞ்சாலையில் நடந்த வாகனச் சோதனையில், லாரியில் கொண்டுவரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில், காவல் ஆய்வாளர் ஆஜராக வேண்டும் என நீதிமன்றத்தில் இருந்து 5 முறை சம்மன் அனுப்பியும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் ஆஜராகவில்லையாம்.
இதையடுத்து, காவல் ஆய்வாளர் ஜி.கே.சலீம் நீதிமன்றத்தில் ஆஜராக பிடிவாரண்ட் பிறப்பித்து அரூர் குற்றவியல் நடுவர் கே.வி.சக்திவேல் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில் 10 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

வெப்ப அலை: அரியலூருக்கு ஆரஞ்சு; 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!

வடலூரில் பழங்கால கட்டடங்கள்? தொல்லியல் துறை ஆய்வு

3-ம் கட்டத் தேர்தல்: 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்வு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT