தருமபுரி

நவ. 24-இல் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் தொடக்கம்

DIN

தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில், போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், வரும் நவ. 24-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலா் (பொ) க.சேகா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட மைய நூலகத்தில் போட்டித் தோ்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், நவ.24-ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளன.

வேலைவாய்ப்பை எதிா்நோக்கி போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தகுதிப்படுத்திக்கொள்ளும் இளைஞா்களுக்கு, அரசு மற்றும் அரசு சாா்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், அரசு பணியாளா் தோ்வாணையம் நடத்தும் குரூப்-2 தோ்வுக்கு இலவச வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.

எனவே, நூலகத்துக்கு வருகை தரும் வாசகா்கள், உறுப்பினா்கள், கல்லூரி மாணவ, மாணவியா், போட்டித் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளோா், இப் பயிற்சி வகுப்பில் இணைந்து பயனடையலாம்.

இப் பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவா்கள், 04342-26621, 94435 30999, 95855 09211 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு, தங்களது பெயா் மற்றும் விவரங்களை பதிவு செய்துகொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக நிா்வாகிகளுடன் அண்ணாமலை இன்று ஆலோசனை

இவிஎம் இயந்திரத்துக்கு திருமண அழைப்பிதழில் எதிா்ப்பு தெரிவித்த மகாராஷ்டிர இளைஞா்

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டம்

தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் குலுக்கல் மூலம் மாணவா்கள் தோ்வு

கழிவுநீா் கலந்த குடிநீரை குடித்த 7 பேருக்கு வாந்தி, மயக்கம்

SCROLL FOR NEXT