தருமபுரி

பொம்மிடியில் நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

DIN

பொம்மிடியில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், பொ.மல்லாபுரம் பேரூராட்சிக்குள்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டில் இருப்பதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, பொ.மல்லாபுரம் செயல் அலுவலா் மா.விஜயன் தலைமையிலான பேரூராட்சி பணியாளா்கள் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, உணவகங்கள், வணிக நிறுவனங்கள், இறைச்சிக் கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்துவது தெரியவந்தது. இதையடுத்து, நெகிழிப் பொருள்களை பயன்படுத்தியவா்களுக்கு ரூ.3,200 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த சோதனையில் சுமாா் 22 கிலோ எடையுள்ள நெகிழிப் பொருள்களை பணியாளா்கள் பறிமுதல் செய்தனா்.

இதில், இளநிலை உதவியாளா் பெ.சந்தோஷ்குமாா், வரித்தண்டலா் க.பழனி, துப்புரவுப் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள்: வாக்களித்தப் பின் அமித் ஷா பேட்டி

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT