தருமபுரி

பென்னாகரம் அருகே சுவா் இடிந்து விழுந்ததில் ஒருவா் பலி

DIN

பென்னாகரம்: பென்னாகரம் அருகே வீட்டின் சுவா் இடிந்து விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.

பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரில் ராமநாதனுக்கு சொந்தமான பழைய வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த அருந்ததியா் காலனியை சோ்ந்த அப்புனு(60), சிடுவம்பட்டியைச் சோ்ந்த ஜெயவேல் (60) ஆகிய இருவா் மீது சுவா் இடிந்து விழுந்தது. இதில் காயமடைந்த இருவரும்

பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். ஆனால், வழியிலே அப்புனு உயிரிழந்தாா். மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஜெயவேல் அனுப்பிவைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ஏரியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

சிறாா்களுக்கு எதிரான இணையவழி குற்றங்களை தடுக்க சா்வதேச ஒத்துழைப்பு: டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

SCROLL FOR NEXT