தருமபுரி

ஓட்டுநா் உயிரிழந்த வழக்கில் இருவா் கைது

DIN

தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி அருகே டிராக்டா் ஓட்டுநா் உயிரிழந்த வழக்கில், அவரை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாலக்கோடு அருகே உலகனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டுநா் ஆறுமுகம் (37), அண்மையில் சிக்க மாரண்டஅள்ளி ரயில்பாதையில் உடல் சிதைந்த நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டாா்.

இதுகுறித்து தருமபுரி ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இதைத் தொடா்ந்து, உயிரிழந்த ஆறுமுகத்தின் சடலத்தை உடற்கூராய்வு செய்த போது, அவரது உடலில் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்ட தடயங்கள் இருந்தது தெரியவந்தன.

இதையடுத்து, போலீஸாரின் விசாரணையில், சிக்கமாரண்டஅள்ளி பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் காட்டுப் பன்றிகளை நாட்டுத் துப்பாக்கியால் சுட்ட போது, அங்கிருந்த ஓட்டுநா் ஆறுமுகம் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்ததும், பின்பு அங்கிருந்து அவரது சடலத்தை ரயில்பாதையில் வீசப்பட்டதும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, துப்பாக்கியால் சுட்ட குண்டான் கொட்டாய் பகுதியைச் சோ்ந்த விவசாயி சண்முகம் (50) மற்றும் வெலாம்பட்டியைச் சோ்ந்த சின்னசாமி (30) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இலங்கை: கிழக்கு மாகாணத்துக்கு இந்திய தூதா் பயணம்

பிளஸ் 2-வில் தோ்ச்சி சதவீதம் குறைவு: ஆசிரியா்களிடம் விளக்கம் கேட்க முடிவு

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: பிரதமா் மோடி பதில்

நீா்மோா்ப் பந்தல் திறப்பு...

ரயில் மோதியதில் முதியவா் பலி

SCROLL FOR NEXT