தருமபுரி

ஏரிகளில் பனை விதைகள் நடவு 

DIN


அரூர் வட்டாரப் பகுதிகளில் உள்ள ஏரிகளில் பனை விதைகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.
அரூர் பெரிய ஏரியின் கரைப் பகுதியில் பனை விதைகள் நடும் பணிகளை எம்பி எஸ்.செந்தில்குமார் தொடக்கிவைத்தார். அப்போது, அவர் கூறுகையில்,  பனை மரத்தின் அனைத்து பாகங்களும் பயன்தரக் கூடியதாகும். நிலத்தடி நீரை பனை மரங்கள் பாதுகாக்கின்றன. பனை மரங்களால் சுற்றுச் சூழல் பாதுகாப்பு, மண் அரிப்புகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.
 இதனால் அரசு சார்பில் பனை மர விதைகள் நடும் பணிகள் நடைபெறுகிறது. எனவே, தன்னார்வ அமைப்பினர், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் பனை மர விதைகளை அதிக அளவில் நட்டு வளர்க்க வேண்டும். இதேபோல்  புங்கன், வேம்பு உள்ளிட்ட மரங்களை வளர்த்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும் என்றார். திமுக ஒன்றியச் செயலர் தேசிங்குராஜன், கட்சி நிர்வாகிகள் மு.கா.முகமது அலி, விண்ணரசன், சந்திரமோகன், சிட்டிபாபு, தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

விவசாயத்துக்கு தினமும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கக் கோரிக்கை

கொளுத்தும் வெயிலால் மின் தடை மக்கள் தவிப்பு

SCROLL FOR NEXT