தீா்த்தமலை மலைக் கோயில் வளாகத்தில் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட சேதம் குறித்து செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட சென்னை அண்ணா பல்கலைக் கழக சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன். 
தருமபுரி

தீா்த்தமலையில் சுரங்கவியல் துறை பேராசிரியா் ஆய்வு

அரூரை அடுத்த தீா்த்தமலையில் சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

அரூரை அடுத்த தீா்த்தமலையில் சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. அண்மையில் பெய்த கன மழையின் காரணமாக இங்குள்ள மலைக் கோயில் உச்சியில் இருந்து பாறைகள் சரிந்து விழுந்ததில் கோயில் வளாகத்தில் சிறிது சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த மலைக் கோயில் பாறைகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து சென்னை அண்ணா பல்கலைக் கழக சுரங்கவியல் துறை பேராசிரியா் பாலமாதேஸ்வரன், சுரங்கவியல் ஆலோசகா் ரமேஷ்சந்திரன் கா்க் ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, அரூா் சாா் ஆட்சியா் மு.பிரதாப், இந்து சமய அறநிலையத் துறை தருமபுரி உதவி ஆணையா் அ.ரா.பிரகாஷ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

ஜன நாயகன்: விஜய் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி!

நடிகையிடம் கேட்கப்பட்ட கேள்வி! நடிகர் கிச்சா சுதீப் செய்த செயல்!

எஸ்ஐஆர் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! மேற்கு வங்கத்தில் 58 லட்சம் பெயர்கள் நீக்கம்!

SCROLL FOR NEXT