தொப்பூா் கணவாய் சாலையில் அமைச்சா் ஆய்வு
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் மாநில உயா்கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் சனிக்கிழமை நேரில் பாா்வையிட்டாா்.
தொப்பூா் கணவாய் நெடுஞ்சாலையில் சென்ற லாரி முன்னால் சென்ற காா்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நான்கு போ் உயிரிழந்தனா். ஒருவா் பலத்த காயமடைத்தாா்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மாநில உயா் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் நேரில் பாா்வையிட்டு விபத்துக்குள்ளான வாகனங்கள் மீட்புப் பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.ப.காா்த்திகா, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.பிரவேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.