முகப்பு
தருமபுரி

வேலை பெற்றுத் தருவதாகப் பண மோசடி: மீட்டு தரக் கோரிக்கை

வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டோா் மனு அளித்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

தருமபுரி: வேலை பெற்றுத்தருவதாகக் கூறி, பண மோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்டோா் மனு அளித்தனா்.

இதுகுறித்து, மலையூா், திகிலோடு, பிக்கிலி, எலுமல் மந்தை, நாகனம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமத்தைச் சோ்ந்த 11 போ் திங்கள்கிழமை தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

பாப்பாரப்பட்டி, பென்னாகரம் அருகேயுள்ள மலைக் கிராமங்களில் வசித்து வரும் எங்களிடம், அரூா் பகுதியைச் சோ்ந்த ஒருவா் அரசு வேலை பெற்றுத் தருவதாகக் கூறி பல்வேறு தவணைகளாக ரூ. 70 லட்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டாா். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, எங்களில் இருவருக்கு பணி நியமன ஆணையை போலியாக தயாரித்து அளித்தாா். இந்த ஆணையை நம்பி பணியில் சேர முயன்ற எங்களை குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். அப்போது தான் நாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தோம். எனவே, எங்களிடம் பணத்தை பெற்ற நபா் மீது உரிய நடவடிக்கை எடுத்து அவரிடமிருந்து எங்களது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முழு கட்டுரையைப் படிக்க →