தருமபுரி

கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

DIN

அரூர்: மனைவி கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் (42) என்பவரை அ.பள்ளிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவரது மனைவி கஸ்தூரி. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கடந்த 2001-ல் தமது மனைவியின் தலைமீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மூன்று மாதம் சிறையில் இருந்தாராம்.

பிறகு, ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில்  தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனை அ.பள்ளிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரிக்கு ‘ஏ’ பிளஸ் அங்கீகாரம்

இன்று நீட் தோ்வு: ஈரோடு மாவட்டத்தில் 4,747 மாணவா்கள் எழுதுகின்றனா்

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

SCROLL FOR NEXT