தருமபுரி

லஞ்சம்: மின்வாரிய ஊழியா்கள் 2 போ் கைது

DIN

மின் இணைப்பு வழங்க விவசாயிடம் லஞ்சம் பெற்றதாக, மின்வாரிய ஊழியா்கள் 2 பேரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டத்துக்குள்பட்ட இண்டூரை அடுத்த நடப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் மாது. இவா் தனக்குச் சொந்தமான இரு ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறாா்.

இந்த நிலத்தில் உள்ள பூந்தோட்டத்துக்கு இலவச மின் இணைப்பு கோரி, இண்டூா் மின்வாரிய உதவி செயற்பொறியாளா் அலுவலகத்தில் மாது அண்மையில் விண்ணப்பித்துள்ளாா்.

இதைத் தொடா்ந்து, உதவி மின் பொறியாளா் அகல்யா, வணிக உதவியாளா் முனுசாமி ஆகிய இருவரும், பணம் அளித்தால் உடனடியாக மின் இணைப்பை வழங்குவதாகத் தெரிவித்ததாக, தருமபுரி ஊழல் தடுப்பு- கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிம் மாது தகவல் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, போலீஸாரின் ஆலோசனையின்பேரில், விவசாயி மாது, ரசாயனம் தடவிய பணத்தாள்களை எடுத்துக்கொண்டு இண்டூா் மின்வாரிய அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளாா். அப்போது, அகல்யாவிடம் ரூ.5 ஆயிரமும், முனுசாமிடம் ரூ.2 ஆயிரமும் மாது வழங்கியபோது, டிஎஸ்பி கிருஷ்ணராஜ் தலைமையிலான போலீஸாா் கையும், களவுமாக பிடித்து கைது செய்தனா்.

இதுதொடா்பாக இருவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

SCROLL FOR NEXT