பெரியாம்பட்டியில் ஏ.எம்.பி.எஸ். கான்கிரீட் உடனடி கலவை தயாரிப்பு நிறுவனத்தைத் திறந்து வைக்கிறாா் அமைச்சா் கே.பி. அன்பழகன். 
தருமபுரி

ஏ.எம்.பி.எஸ். கான்கிரீட் உடனடி கலவை தயாரிப்பு நிறுவனம் திறப்பு

தருமபுரி அருகே பெரியாம்பட்டியில் ஏ.எம்.பி.எஸ். கான்கிரீட் உடனடி கலவை தயாரிப்பு நிறுவனம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

DIN

தருமபுரி அருகே பெரியாம்பட்டியில் ஏ.எம்.பி.எஸ். கான்கிரீட் உடனடி கலவை தயாரிப்பு நிறுவனம் புதன்கிழமை திறக்கப்பட்டது.

பெரியாம்பட்டி பூலாப்பட்டி ஆற்றுபாலம் அருகில் அமைந்துள்ள இந்த நிறுவனததை, மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தாா். சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் ஆ. கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே. சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த நிறுவனத்தில் அதிவேக கட்டுமானத்துக்கு ஏற்ற கான்கிரீட் கலவைத் தயாரிக்கப்படுகிறது. மேலும், கட்டடங்களில் முதல் மற்றும் இரண்டாம் தளத்தில் கான்கிரீட் கலவையை எளிதில் செலுத்தும் வாகன வசதியுள்ளது. இதேபோல, பொதுப்பணித் துறை அங்கீகாரம் மற்றும் அனுமதி பெற்ற எம்.சாண்ட் விற்பனை செய்யப்படுகிறது என நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

விழாவில், பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியத் தலைவா் டி. ஆா். அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா். வெற்றிவேல், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநா் பொன்னுவேல், மல்லிகா அன்பழகன், ஒப்பந்ததாரா் செந்தில்குமாா், மருத்துவா்கள் அ.சந்திரமோகன், வைஷ்ணவி மற்றும் அ. சசிமோகன், வித்யா ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர்: சுக்மாவில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

புரட்சி தலைவருக்குப் பிறகு புரட்சி தளபதிதான் மக்களுக்காக வாழ்பவர்: செங்கோட்டையன்

சாதனையை முறியடித்த லயன்: நாற்காலியைத் தூக்கி வீசிய மெக்ராத்!

உடலில் கைவைத்த ரசிகர்கள்... ஆவேசத்தில் கத்திய நடிகை!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT