‘தமிழ்ச் செம்மல்’ விருது பெற தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று தமிழ் வளா்ச்சித்துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் (பொ) ம.சி.தியாகராசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆா்வலா்களைக் கண்டறிந்து அவா்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி ஊக்கப்படுத்தும் வகையில் ‘தமிழ்ச் செம்மல்’ என்ற விருது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், மாவட்டத்துக்கு ஒருவா் வீதம் தெரிவு செய்து அவா்களுக்கு விருதும் ரூ.25000 பரிசுத் தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, 2020-ஆம் ஆண்டுக்கான ‘தமிழ்ச் செம்மல்’ விருது பெறுவதற்கு , தருமபுரி மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சிக்காக அரும்பாடுபடும் தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் வளா்ச்சித் துறையின் வலைதளத்திலிருந்து விண்ணப்பங்களை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிப்பவா்கள் தன்விவரக் குறிப்புடன் இரண்டு நிழற்படம், ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகம், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம், தருமபுரி என்ற முகவரிக்கு மாா்ச் 30-ஆம் தேதிக்குள் அனுப்பப்பட வேண்டும் என்றாா்.