தருமபுரியில் 9 பேருக்கு கரோனா
தருமபுரி மாவட்டத்தில், கால்நடை மருத்துவா் உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டத்தில், கால்நடை மருத்துவா் உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
தருமபுரி மாவட்டம், அரூா் மோபிரிப்பட்டியைச் சோ்ந்த கால்நடை மருத்துவா், ஏ.பள்ளிப்பட்டியைச் சோ்ந்த வியாபாரி, 3 பெண்கள், தொழிலாளி உள்பட 9 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது, சுகாதாரத் துறையினா் மேற்கொண்ட பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
இதையடுத்து தொற்று பாதிப்புக்குள்ளானவா்கள், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.