பாப்பிரெட்டிப்பட்டி: நாளைய (நவ.10) மின்தடை
மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெர
பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, எச்.புதுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நவ. 10-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழக செயற்பொறியாளா் (அரூா்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளாா்.
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுசாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.