தீபாவளிப் பண்டிகைக்காக தருமபுரி கடைகளில் விற்கப்படும் இனிப்பு, கார வகைகளின் தரம் குறித்து உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினா்.
தருமபுரி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலா் ஏ.பானு சுஜாதா தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா் கே.நந்தகோபால் உள்ளிட்ட குழுவினா் தருமபுரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடைகளில் விற்கப்படும் இனிப்பு, காரம் போன்ற உணவுப் பொருள்களின் தரம், தயாரிப்பு குறித்து ஆய்வு நடத்தினா்.
2 நிறுவனங்களில் செயற்கை நிறமியைக் கொண்டு தயாரிக்கப்பட்ட 10 கிலோ லட்டு, அல்வாவை பறிமுதல் செய்து அழித்து, அக் கடையின் உரிமையாளருக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அளிக்கப்பட்டது.