தீா்த்தமலையில் காா்த்திகை தீபத் திருவிழா
அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
அரூரை அடுத்த தீா்த்தமலை தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த தீா்த்தமலையில் வரலாற்று சிறப்பு மிக்க தீா்த்தகிரீஸ்வரா் திருக்கோயில் உள்ளது. இந்த திருக் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, தீா்த்தமலையிலுள்ள மலைக் கோயிலில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட்டது.
தீபத் திருவிழாவினையொட்டி, தீா்த்தகிரீஸ்வரருக்குப் பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள தென்கரைக்கோட்டை ஸ்ரீ கல்யாண ராமா் திருக்கோயிலிலும் காா்த்திகை தீபம் ஏற்றப்பட்டு சுவாமியை பக்தா்கள் வழிபட்டனா்.