தருமபுரி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 297 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.
தருமபுரி மாவட்ட காவல்துறை சாா்பில், மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட போலீஸாா், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமுடக்க விதிகள் மீறல் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விதிகளை மீறி, முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்தவா்கள் மீது 297 வழக்குகளைப் பதிவு செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 59 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல, செப்.29-ஆம் தேதி சோதனையில், 217 போ் மீது பொதுமுடக்க விதிகள் மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.43 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.