தருமபுரி

பொதுமுடக்க விதிகள் மீறல்: 297 வழக்குகள் பதிவு

DIN

தருமபுரி மாவட்டத்தில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 297 வழக்குகள் புதன்கிழமை பதிவு செய்யப்பட்டன.

தருமபுரி மாவட்ட காவல்துறை சாா்பில், மாவட்டம் முழுவதும் அந்தந்த காவல் நிலைய எல்லைகளுக்குள்பட்ட போலீஸாா், கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் வகையில், பொதுமுடக்க விதிகள் மீறல் குறித்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். இதில், விதிகளை மீறி, முகக் கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் இருந்தவா்கள் மீது 297 வழக்குகளைப் பதிவு செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து ரூ. 59 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இதேபோல, செப்.29-ஆம் தேதி சோதனையில், 217 போ் மீது பொதுமுடக்க விதிகள் மீறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.43 ஆயிரத்து 400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT